Tuesday, April 29, 2008

எனது 'சூப்பர் மேன்' கதைக்கேற்றவர் சூர்யா : மிஷ்கின்


ன்னிடமுள்ள 'சூப்பர் மேன்' வகையறா கதைக்கு மிகவும் பொருத்தமானவர் சூர்யாதான் என்று உறுதியாகச் சொல்கிறார் மிஷ்கின். 'அஞ்சாதே' வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'நந்தலாலா' படத்தை இயக்கி, நடித்துக்கொண்டிருக்கும் மிஷ்கின், சூப்பர் மேன் கதையை உருவாக்கி, தயாராக வைத்துள்ளார். இதில், சூப்பர் மேனாக சூர்யாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடந்தவண்ணம் உள்ளன. சூப்பர் மேன் கதை உதித்தவுடன் தன் மனதில் தோனிறவர் சூர்யாதான் என்று கூறும் மிஷ்கின், தமிழ் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் இப்படம் அமையும் என நம்பிக்கைத் தெரிவிக்கிறார்.

மணிரத்னமா, ஷங்கரா? : குழப்பத்தில் ஐஸ்வர்யா ராய்!


ஷங்கர் இயக்கும் ரஜினியின் 'ரோபோ'வுக்கு கால்ஷீட் தருவதா? அல்லது மணிரத்னம் இயக்கும் அபிஷேக்கின் படத்துக்கு தேதிகளை ஒதுக்கீடு செய்வதா..?இத்தகைய குழப்பம் மிகுந்த சூழலில் திணறி வருகிறார், நடிகை ஐஸ்வர்யா ராய்! இவ்விரு படங்களின் படப்படிப்புகளுமே செப்டம்பரில் தொடங்கவுள்ளது. இவற்றில் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க முடியும் என்ற நிலை உருவாகியிருப்பதால், ஐஸ்வர்யா ராய் மிகுந்த குழப்பத்தில் உள்ளார். தன்னை சினிமா உலகுக்கு அறிமுகப்படுத்திய மணிரத்னத்தின் பக்கம் சாய்வதா அல்லது, தன்னை எட்டாவது உலக அதிசயமாக்கி, 'ஜீன்ஸ்'சுடன் வலம் வரச் செய்த ஷங்கருக்கு கடைக்கண் பார்வையை செலுத்துவதா?'குரு'வுக்குப் பிறகு மணியின் இயக்கத்தில் மீண்டும் கணவர் அபிஷேக்குடன் ஜோடி சேர வேண்டும் (தமிழில் விக்ரமுடன்) என்ற அவாவும் உண்டு. ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆவலால் 'ரோபோ'வை வசப்படுத்த வேண்டும் என்ற ஆசையுமுண்டு.இந்தச் சூழலில் கொஞ்சம் புத்திசாலித்தனமாகவே முடிவு மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் ஐஸ், 'ரோபோ' படத்துக்கே முன்னுரிமை கொடுக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மணி இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு தீபிகா படுகோனேக்குச் செல்லவிருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளன. ஆனால், இரு பெரும் வாய்ப்புகளையும் நழுவவிட விரும்பாத ஐஸ், தேதிகளில் சரிசெய்ய வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து மணி, ஷங்கர் ஆகிய இருவரிடமும் பேச திட்டமிட்டுள்ளாராம்!

Monday, April 28, 2008

நீல ரத்னக்கல்லில் உலகின் மிகச்சிறிய குரான்

துபாய்: நீல ரத்னக் கற்களில் உலகின் மிகச் சிறிய குரான் வடிவமைக்கப்பட்டுள்ளது.விலை உயர்ந்த நீல ரத்னக் கற்களில் உலகின் மிகச் சிறிய குரானை மிர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.10,000 குரான் வாசகங்கள் இந்த குரானில் பொறிக்கப்பட்டுள்ளன. 58 மி.மீ. அகலமும், 98 மி.மீ. உயரமும் கொண்ட 20 நீல ரத்னக்கல் பட்டிகளில் இந்த வாசகங்கள் வெண்தங்கம் என்றழைக்கப்படும் பிளாட்டினம் உலோகத்தால் எழுதப்பட்டுள்ளன.துபாயில் கடந்த ஏப்ரல் 23 முதல் 26 வரை நடந்த நகை கண்காட்சியில் இந்த குரான்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் விலை தலா 15,000 தினார்களாகும்.இது பற்றி மிர் எண்டர்பிரைசஸ் நிர்வாக மேலாளர் டாக்டர் மிர் மொக்தாரி கூறுகையில், 'மெக்கா' (MEQA - Micro Engineering of Quran as Art) என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ரத்னக்கல் குரானை தயாரிக்க 2 வருடங்கள் பிடித்தன.குரான் வாசகங்கள் விரல்களில் பட்டு சேதமடையாமல் இருக்கும் வகையில் அதன்மீது குவார்ட்ஸ் இழை பூச்சு அமைக்கப்பட்டுள்ளது.குரானின் புனிதம் பாதுகாக்கப்படும்வகையில், மிக குறைந்த அளவிலேயே இந்த ரத்னக்கல் குரான்கள் தயாரிக்கப்பட்டன.திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளை போற்றும் நினைவுப்பரிசாக இந்த குரான்களை வாங்கி வழங்கலாம் என்றார்.இந்த குரான்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதிலுள்ள வாசகங்களை படிப்பதற்கு வசதியாக பூதக்கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Friday, April 25, 2008

புராதன முருகன் ஆலயம் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் சங்க காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் முருகன் கோயில் ஒன்றின் இடிபாடுகளை இந்திய அகழ்வாரய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மகாபலிபுரத்துக்கு வடக்கே சாலாவான் குப்பம் என்னும் இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த ஆய்வாளர்கள் அங்கு சுனாமி தாக்குதலுக்கு பின்னர் மண்ணின் அடியில் இருந்து வெளிவந்து காணப்பட்ட ஒரு கல்வெட்டை கண்டுள்ளனர்.

அகழ்வு வேலைகள் தொடருகின்றன
அகழ்வு வேலைகள் தொடருகின்றன
அதில் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு படையெடுத்து வந்து, ஆட்சி செய்த இராஷ்டிரகூடர்கள் அங்கிருந்த ஒரு கோயிலுக்கு மானியங்கள் வழங்கியதாகக் கூறப்பட்டிருந்தது.

அதனை அடுத்து அங்கு ஆய்வு நடத்திய போது, அந்தப் பகுதிக்கு அருகிலே மண்ணில் புதைந்த நிலையில் ஒரு முருகன் ஆலயத்தைக் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

அகழ்வுப் பணியில் மும்முரம்
அகழ்வுப் பணியில் மும்முரம்
ஆனால் ஆய்வுகளை அவர்கள் தொடர்ந்த போது, அந்த கோயிலின் அடியில் மேலும் மண்ணில் புதைந்த நிலையில் மற்றொமொரு கோயிலும் காணப்பட்டுள்ளது.

அதாவது முதலில் பல்லவர்களால் சங்க காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோயில், சுனாமி அலைகளால் சேதமடையவே, அதன் மீது மீண்டும் மற்றுமொரு கோயில் பின்னர் ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று கூறுகிறார் சென்னை அகழ்வாராய்ச்சித் துறையைச் சேர்ந்த டி. சத்யமூர்த்தி அவர்கள்.

மீட்கப்பட்ட சில தூண்கள்
மீட்கப்பட்ட சில தூண்கள்
பின்னர் இரண்டாவது கோயிலும்(மேலே இருந்த கோயில்) சுனாமியால் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தக் கோயில் கி.மு 2வது நூற்றாண்டுக்கும் கி.பி முதலாவது நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கருதப்படுவதாகவும் ஆய்வுகள் தொடர்வதாகவும் சத்யமூர்த்தி கூறினார்.

Tuesday, April 22, 2008

பவர் கட் இல்லாத குஜராத் மாநிலம்



குஜராத் கிராமங்களில் மின்தடையே இல்லை: மோடி திட்டம் முழு வெற்றி
ஏப்ரல் 22,2008,01:10

ஆமதாபாத்:குஜராத் மாநில கிராமங்களில் 24 மணி நேரமும் மின்சார வினி யோகம் கிடைக்கிறது; இதனால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது; தொழில், வியாபாரம் அதிக அளவில் நடக்கிறது. இது மட்டுமல்ல, நகரங்களில் இருந்து கிராமத்துக்கு மீண்டும் திரும்பு வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிராமங்களில் முழு அளவில் மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில்,'ஜோதி கிராம் யோஜனா' என்ற திட்டத்தை, ஆயிரம் கோடி ரூபாய் செலவில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி துவங்கி உள்ளார். மின்சார வினியோகத்தை சீரமைப் பது, பழுதில்லாமல் பராமரிப்பது, திருட்டை தடுப்பது ஆகியவை தான் இந்த திட்டத் தின் முக்கிய அம்சங்கள். இதன்படி, 18 ஆயிரம் கிராமங்களுக்கு 24 மணி நேரமும் மின்சார வினியோகம் தரப்பட்டு வருகிறது. எல்லா கிராமங்களிலும் மின்சார வசதி களும் செய்யப்பட்டுள்ளன.இதனால், கிராம மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருகிறது. குடிசைத்தொழிலாக செய்யப்படும் வைரம் பட்டை தீட்டப்படும் தொழிலை, மீண்டும் கிராமங்களில் செய்ய ஆரம்பித்து விட்டனர்.கிராம மாண வர்களின் கல்வித்திறன் 90 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்சாரம் இருப்பதால் அவர் களால் படிக்க முடிகிறது. சிறு தொழில்களும் அதிகரித்து வருகின்றன. மின்சாரம் திருட்டுப் போவதும், வீணாவதும் வெகுவாக குறைந்துள்ளது. அதனால், மின்சார வினியோகத்தில் தடை இல்லாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது.நகரங்களில், மின்சார வினியோகம் இருக்கிறதுஎன்று போனவர்கள் பலரும் இப்போது மீண்டும் கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். 'கிராமங்களுக்கு மின்சார சப்ளை செய்யும் திட்டம் முழு அளவில் வெற்றி அடைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் கிராமங்களில் மின் சப்ளை சரிவர செயல்படாத நிலையில் இங்கு 1மக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செயல்படுகிறது' என்று அதிகாரிகள் கூறினர்.


நன்றி

தினமலர்

Monday, April 21, 2008

புதிர்கள்- ரயில் பயணத்தில் கவனிக்க மறந்தது !




ரயிலில் நமது இருக்கைக்கு எதிரே உள்ள இருக்கை காலியாக இருந்தால் அனைவரும் செய்யும் காரியம் என்ன ?




நாம் பஸ் ஸ்டாண்டில் நீண்ட நேரமாக நின்றும் பஸ் வரவில்லை என்றால் என்ன அர்த்தம் தெரியுமா ?




நமது நகரில் டூ வீலர் ஓட்டுபவர்களின் மானசீக குரு யார் ?




விடைகள்






எவ்வளவு பெரிய ஜென்டில் மேனகா இருந்தாலும் அவர் அந்த சீட்டில் காலை தூக்கி வைப்பார் ( கால் பக்கத்தில் யார் இருந்தாலும் கவலை பட மாட்டார் )




அடுத்து வருவது தனியார் பஸ் ஆக இருக்கும் ( வெயிட் பண்ணியது பண்ணினோம் கூட ஒரு ஐந்து நிமிடம் வெயிட் பண்ணினால் அடுத்து ஒரு கவர்மண்ட் பஸ் காலியாக வரும் )




தனியார் பஸ் ஓட்டுபவர்கள் தான் ! ( அவர்கள் ஹாரன் அடித்தவுடன் யாராக இருந்தாலும் விலகி ஓடி விட வேண்டும் )






Sunday, April 20, 2008

பூச்சாண்டி விஜயகாந்த் .

பூச்சாண்டி விஜயகாந்த் !!!!!!!!!!!



சிறுவர்கள் இதனை பார்த்து பயந்து விட்டால் உடனே கோவிலுக்கு அழைத்து சென்று திரு நீறு பூசவும்.

அழகர் ஆற்றில் இறங்கினார்.






ஏப்ரல் இருபதாம் தேதியான இன்று கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் சரியாக காலைஏழு மணி ஐந்து நிமிடத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் . பக்தர்கள் லட்சகணக்கில் கண்டு மகிழ்ந்தனர் .



பச்சை பட்டு உடுத்தி இறங்கியதால் சுபிக்ஷம் பெருகும் என்று மக்கள் மகிழ்ச்சி கொண்டனர் .

Saturday, April 19, 2008

டோனி டாஸ் வின் பண்ணினார் . பேட்டிங் சூஸ் பண்ணினார்.


மொகலியில் நடை பெறும் ட்வென்டி ட்வென்டி கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற சென்னை கிங்க்ஸ் அணியின் கேப்டன் டோனி பேட்டிங் சூஸ் பண்ணி வெளையடிவருகிறார்கள் . இரண்டாவது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி இருபது ரன்கள் .

Friday, April 18, 2008

அறை எண் முன்னூற்றி ஐந்தில் கடவுள் சினிமா விமர்சனம் .


சும்மா சொல்லக்கூடாது சிம்புதேவன் மீண்டும் ஒரு ஜனரஞ்சகமான குடும்பத்துடன் சென்று பார்க்கும் படியான படத்தை தைரியமாக கொடுத்துள்ளார் .

கதை கற்பனை மிகுந்தது தான்என்றாலும் சுவாரசியமானது .

சென்னை திருவல்லிகேணியில் மேன்சன் ஒன்றில் வசித்து வரும் இரண்டு நண்பர்கள் ஒரு நாள் போதை யில் வெறுப்பு மிகுதியால் கடவுளை நோக்கி திட்ட , கடவுள் அவர்களுக்கு தரிசனம் தந்து அவர்களுடன் ஒரு வாரம் தங்கி அவர்கள் பிரச்னை என்ன என்று கவனிப்பதாக கூறுகிறார் .

அவர் செல்லும் நாள் வந்த அன்று அவரின் பவரினை நண்பர்கள் திருடி , அவர்கள் இருவரும் கடவுள் ஆகிறார்கள் . பின் உழைப்பில் அல்லாது கிடைக்கும் பணத்தின் சிறுமை கண்டு திருந்தி நல்ல தன்னம்பிக்கை உள்ள உழைக்கும் மனிதர்கள் ஆகிறார்கள் .

நண்பர்களாக சந்தானமும் கஞ்சா கருப்பும் வருகிறார்கள்.

இருவருக்கும் நடிக்க நல்ல தீனி . கஞ்சா கருப்பு சவுண்டு கொஞ்சம் கம்மியாக பேசுவதால் வெறுப்பு ஏதும் வரவில்லை (வேறு படங்களில் வருவது போல் )

பிரகாஷ் ராஜ் கடவுளாக வருகிறார் .

எந்த வித ஆபாசமும் இல்லாமல் படத்தை எடுத்ததற்கு சிம்புதேவனுக்கு ஒரு சபாஷ் போடலாம் .

அட்வைஸ் மழையை கொஞ்சம் கொறைச்சு இருக்கலாம் .