Monday, May 26, 2008

ஜூன் 20 இல் ரஜினிகாந்தின் குசேலன் ஆடியோ ரிலீஸ்


ரஜினி மட்டுமல்ல, அவரை வைத்து ஆரம்பிக்கிற படங்களும்கூட மின்னல் வேகத்தில் நடந்து முடிந்துவிடும். அவ்வளவு ஸ்பீடு.'குசேலன்' படப்பிடிப்பு நேற்றுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. அதற்குள் படத்தின் பெரும்பாலான காட்சிகளை மளமளவென முடித்து, வரும் 20ம் தேதி ஆடியோ ரிலீஸ் வரை வந்துவிட்டார் இயக்குனர் வாசு. ஜூன் ஆரம்பத்தில் கேரளாவில் ஒரு பாடல் காட்சி. ஜூன் 3 லிருந்து 15ம் தேதி வரை ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் ஷூட்டிங். அவ்வளவு தான் ஷூட்டிங் ஓவர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படம் தயாராவதால், காலையில் சென்னையிலும், மாலையில ஹைதராபாத்திலும் குசேலன் ஆடியோ ரிலீஸ் ஆகிறது. இரண்டு நிகழ்ச்சிக்கும் விழா நாயகர் சாட்சாத், ரஜினியேதான்!

Wednesday, May 21, 2008

மீண்டும் கதாநாயகனாகிறார் "வடிவேலு"!


''இந்திரலோகத்தில் அழகப்பன்'' புகட்டிய பாடத்தால், கதாநாயகனாக இனி வலம் வர வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த வடிவேலுவை, ஒரு கதை புரட்டிப் போட்டு மீண்டும் நாயகனாக்கியுள்ளது. குறிப்பாக அவர் கேட்ட கதையில் வரும் கதாப்பாத்திரம் அவரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. தனக்கெனவே படைத்த பாத்திரமாகவே கருதியிருக்கிறார். ஒரு தொழில்முறை கொலைக்காரனுக்கு, தான் எதைத் தொட்டாலும் தனக்கே 'ஆப்பு' ஆகிவிடும் நிலை தொடர்கிறது. இதுவே, அக்கதாப்பாத்திரத்திலுள்ள தனித்துவம்! 'மாயாவதி மாரிசன்' தொலைக்காட்சித் தொடரை இயக்கிய ராஜூ ஈஸ்வரன்தான், இந்தச் சிரிப்பு கொலைக்காரனை உருவாக்கியவர்.இப்படத்தை, திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தயாரிக்கிறார்.

Tuesday, May 20, 2008

ரஜினிகாந்தின் 'இருபதுக்கு இருபது'!


இது 'இருபதுக்கு இருபது' சீசன் போலும்... ரஜினிகாந்துக்கும் ஐபிஎல்-லுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவருக்கும் 'இருபதுக்கு இருபது'க்கும் தொடர்பு உண்டு. ரஜினிகாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் 'குசேலன்' படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. "சினிமா சினிமா சினிமாதான், எம்ஜிஆரு, சிவாஜி சாரு, என்டிஆரு, ராஜ்குமாரு வந்ததிந்த சினிமாதான்..." என்று தொடங்கும் வாலி எழுதிய ரஜினியின் அறிமுக பாடல், ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. இந்நிலையில், ரஜினிக்கு எஞ்சியுள்ள நயன்தாராவுடனான டூயட் பாடல் கேரள மாநிலம் ஆலப்புழையில் அடுத்த வாரம் எடுக்கப்படவுள்ளது. இங்கேதான் 'இருபதுக்கு இருபது' விஷயம் ஆரம்பமாகிறது. "ஓம் ஸாரிரே ஸாரே ஸாரே, போக்கிரிராஜா பொல்லாதவன் நீதான் ஸாரே ஸாரே..." என்று தொடங்கும் பாடலில் 20 வித கெட்டப்புக்களில் ரஜினி நடிக்கிறார். இந்தப் பாடலில், ரஜினி நடித்த 20 படங்களின் தலைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே 'இருபதுக்கு இருபது'! குசேலனை ஜூலை 15-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Monday, May 19, 2008

"செந்தமிழும் நாப்பழக்கம் " முழுப்பாட்டும் தெரியுமா ? உங்களுக்காக முழுப்பாட்டும் !!

"சித்திரமும்
கைப்பழக்கம் ;

செந்தமிழும் நாப்பழக்கம்,
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்:
நித்தமும் நடையும் நடை ப்பழக்கம்,
தானம் , தயை , நட்பு , பிறவி
குணப்பழக்கம் .!"


இப்பாட்டுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் பின்னூட்டமிடலாம் !
நாம் நினைக்கும் அர்த்தத்தை விட ஆழ்ந்த அர்த்தம் கொண்டது இந்த பாட்டு !

Thursday, May 15, 2008

தசாவதாரம் : நீதிமன்றத்தில் வெளியான ''ரகசியங்கள்''! உங்களுக்காக


''தசாவதாரம்'' படப்பிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்தே, அப்படத்தைப் பற்றிய பல ரகசியங்கள் காக்கப்பட்டு வந்தன. அதில், சிலவற்றை நீதிமன்றத்தின் வாயிலாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்டுள்ளார்; தணிக்கைக்குழுவும் தன் பங்குக்கு சில தகவல்களை வெளியிட்டுள்ளது.கமலஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள `தசாவதாரம்' படத்தில் உள்ள பல காட்சிகள் வைஷ்ணவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளன என்று `இன்டர் நேஷனல் ஸ்ரீவைஷ்ணவ தர்மா சம்ரக்ஷணா' சங்க தலைவர் கோவிந்த ராமானுஜதாசர், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.வைஷ்ணவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ள காட்சிகளை, இப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் ராஜசூர்யா, சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய தணிக்கை குழுவும், இந்தப் படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் தனித்தனியாக பதில் மனுவை தாக்கல் செய்தனர். கே.எஸ்.ரவிக்குமார் தனது மனுவில், "12-ம் நூற்றாண்டு வரலாற்றில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள்தான் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன. தமிழக அரசு வெளியிட்ட வரலாற்று புத்தகங்கள் அடிப்படையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, `பிற்காலச் சோழர் சரித்திரம் பகுதி-2', `தமிழ்நாட்டு வரலாறு, சோழ பெருவேந்தர் காலம்' ஆகிய புத்தகங்களில் உள்ள கருத்துக்கள் அடிப்படையில்தான் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ராமானுஜரை, ஸ்ரீரங்கநாதர் சிலையோடு சேர்த்து கட்டி கடலில் தள்ளிவிடுவது போன்ற காட்சி இருப்பதாக கூறுவது தவறு. `தசாவதாரம்' என்ற பெயர் காப்புரிமை கொண்ட பெயரல்ல. இந்த பெயரை பயன்படுத்துவதில் தவறில்லை.கமலஹாசன், வைஷ்ணவர் பாத்திரத்தில் நடித்துள்ளார். விஷ்ணுவுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்வது போன்ற காட்சி அமைந்துள்ளன. `ஓம்' என்ற மந்திரத்தின் மீது நடிகர் கமலஹாசன் கால் வைத்து ஏறுவது போன்ற காட்சிகள் படத்தில் இருப்பதாகவும் பகவத் கீதை' புத்தகத்தின் மேல் கால் வைத்து ஏறுவது போலவும் காட்சிகள் அமைந்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற காட்சிகள் அமையவில்லை.மேலும், சைவர்களுக்கும், வைஷ்ணவர்களுக்கும் இடையே வன்முறை மோதல் இருப்பது போலவும் காட்சிகளை தயாரிக்கவில்லை. ராமானுஜசாரியார் கதாபாத்திரத்தில் கமலஹாசன் நடிக்கவில்லை. மேலும், இந்த படம் ஸ்ரீரங்கநாதர் அல்லது ஸ்ரீரங்கம் கோவில் கதை கொண்டதல்ல. ஆகவே, இந்த படத்தில் உள்ள எந்த காட்சியையும் நீக்க தேவையில்லை.பல வைஷ்ணவ நண்பர்கள் இந்த படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர். கடவுள் விஷ்ணுவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆகவே, இந்த படத்தை முழுமையாக திரையிட அனுமதிக்க வேண்டும்.மனுதாரர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦மத்திய தணிக்கை குழு அதிகாரி பாபு ராமசாமி தாக்கல் செய்த பதில் மனுவில், இப்படத்தில் கமலஹாசன் ராமானுஜர் வேடத்தில் நடிக்கவில்லை. ராமானுஜரின் உண்மையான சிஷ்யரான ரங்கராஜன் நம்பி வேடத்தில் அவர் நடித்து, குரு பக்திக்காக தியாகம் செய்வதாக கதை அமைந்துள்ளது.மேலும், சிதம்பரம் கோவிலில் உள்ள கோவிந்தராஜர் சிலையை அகற்ற முயன்றபோது அரசரின் வீரர்களோடு சண்டைபோடுவது போன்ற காட்சி அமைந்துள்ளது. ஆகவே, இந்த படம் எந்த வகையிலும் மத உணர்வை பாதிக்கும் வகையிலோ, மோதலை ஏற்படுத்தும் வகையிலோ அமையவில்லை. இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அப்படியிருக்க, அதற்கு முன்பாகவே வழக்கு தொடரப்பட்டிருப்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. ஆகவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இறுதியில், இந்த வழக்கு விசாரணையை வரும் 20-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்!