குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா !--- கவியரசு கண்ணதாசன் .
Tuesday, April 29, 2008
எனது 'சூப்பர் மேன்' கதைக்கேற்றவர் சூர்யா : மிஷ்கின்
மணிரத்னமா, ஷங்கரா? : குழப்பத்தில் ஐஸ்வர்யா ராய்!
Monday, April 28, 2008
நீல ரத்னக்கல்லில் உலகின் மிகச்சிறிய குரான்
Friday, April 25, 2008
புராதன முருகன் ஆலயம் கண்டுபிடிப்பு
மகாபலிபுரத்துக்கு வடக்கே சாலாவான் குப்பம் என்னும் இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த ஆய்வாளர்கள் அங்கு சுனாமி தாக்குதலுக்கு பின்னர் மண்ணின் அடியில் இருந்து வெளிவந்து காணப்பட்ட ஒரு கல்வெட்டை கண்டுள்ளனர்.
அகழ்வு வேலைகள் தொடருகின்றன |
அதனை அடுத்து அங்கு ஆய்வு நடத்திய போது, அந்தப் பகுதிக்கு அருகிலே மண்ணில் புதைந்த நிலையில் ஒரு முருகன் ஆலயத்தைக் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
அகழ்வுப் பணியில் மும்முரம் |
அதாவது முதலில் பல்லவர்களால் சங்க காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோயில், சுனாமி அலைகளால் சேதமடையவே, அதன் மீது மீண்டும் மற்றுமொரு கோயில் பின்னர் ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று கூறுகிறார் சென்னை அகழ்வாராய்ச்சித் துறையைச் சேர்ந்த டி. சத்யமூர்த்தி அவர்கள்.
மீட்கப்பட்ட சில தூண்கள் |
இந்தக் கோயில் கி.மு 2வது நூற்றாண்டுக்கும் கி.பி முதலாவது நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கருதப்படுவதாகவும் ஆய்வுகள் தொடர்வதாகவும் சத்யமூர்த்தி கூறினார்.
Tuesday, April 22, 2008
பவர் கட் இல்லாத குஜராத் மாநிலம்
குஜராத் கிராமங்களில் மின்தடையே இல்லை: மோடி திட்டம் முழு வெற்றி
ஏப்ரல் 22,2008,01:10
ஆமதாபாத்:குஜராத் மாநில கிராமங்களில் 24 மணி நேரமும் மின்சார வினி யோகம் கிடைக்கிறது; இதனால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது; தொழில், வியாபாரம் அதிக அளவில் நடக்கிறது. இது மட்டுமல்ல, நகரங்களில் இருந்து கிராமத்துக்கு மீண்டும் திரும்பு வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிராமங்களில் முழு அளவில் மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில்,'ஜோதி கிராம் யோஜனா' என்ற திட்டத்தை, ஆயிரம் கோடி ரூபாய் செலவில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி துவங்கி உள்ளார். மின்சார வினியோகத்தை சீரமைப் பது, பழுதில்லாமல் பராமரிப்பது, திருட்டை தடுப்பது ஆகியவை தான் இந்த திட்டத் தின் முக்கிய அம்சங்கள். இதன்படி, 18 ஆயிரம் கிராமங்களுக்கு 24 மணி நேரமும் மின்சார வினியோகம் தரப்பட்டு வருகிறது. எல்லா கிராமங்களிலும் மின்சார வசதி களும் செய்யப்பட்டுள்ளன.இதனால், கிராம மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருகிறது. குடிசைத்தொழிலாக செய்யப்படும் வைரம் பட்டை தீட்டப்படும் தொழிலை, மீண்டும் கிராமங்களில் செய்ய ஆரம்பித்து விட்டனர்.கிராம மாண வர்களின் கல்வித்திறன் 90 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்சாரம் இருப்பதால் அவர் களால் படிக்க முடிகிறது. சிறு தொழில்களும் அதிகரித்து வருகின்றன. மின்சாரம் திருட்டுப் போவதும், வீணாவதும் வெகுவாக குறைந்துள்ளது. அதனால், மின்சார வினியோகத்தில் தடை இல்லாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது.நகரங்களில், மின்சார வினியோகம் இருக்கிறதுஎன்று போனவர்கள் பலரும் இப்போது மீண்டும் கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். 'கிராமங்களுக்கு மின்சார சப்ளை செய்யும் திட்டம் முழு அளவில் வெற்றி அடைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் கிராமங்களில் மின் சப்ளை சரிவர செயல்படாத நிலையில் இங்கு 1மக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செயல்படுகிறது' என்று அதிகாரிகள் கூறினர்.
Monday, April 21, 2008
புதிர்கள்- ரயில் பயணத்தில் கவனிக்க மறந்தது !
Sunday, April 20, 2008
பூச்சாண்டி விஜயகாந்த் .
சிறுவர்கள் இதனை பார்த்து பயந்து விட்டால் உடனே கோவிலுக்கு அழைத்து சென்று திரு நீறு பூசவும்.